38. அல்லாஹ் தீட்டும் வர்ணம்

ஒருவர் ஒரு மதத்தைத் தழுவும் போது வர்ணம் கலந்த நீரில் அவரைக் குளிப்பாட்டி, அல்லது தெளித்து "இப்போது நமது மதத்தில் சேர்ந்து விட்டார்" எனக் கூறும் வழக்கம் அன்று இருந்தது. இஸ்லாத்தில் சேர்வதற்கு இத்தகைய வர்ணம் கலந்த நீரோ, வண்ணப் பொடிகளோ இல்லாததை மற்றவர்கள் ஏளனமாகப் பார்க்கக் கூடும்.

உடல்களில் தீட்டும் வர்ணம் மறைந்து விடும். அல்லாஹ்வோ உள்ளங்களில் இஸ்லாம் எனும் வர்ணம் தீட்டுகிறான். அது நிலையானது என்று பதில் கூறும் வகையில் இவ்வசனம் (2:138) அருளப்பட்டது.