இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குரைஷ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
106:1, 2, 3. குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை காலப் பயணங்களில் அவர்களை மகிழ்வித்ததற்காகவும் இந்த ஆலயத்தின்33 இறைவனை அவர்கள் வணங்கட்டும்.26106:4. பசியின் போது அவர்களுக்கு அவன் உணவளித்தான்.463 பயத்திலிருந்து அவர்களுக்கு அபயமளித்தான்.34