52. அரபுகளின் மூடநம்பிக்கை
இஹ்ராமுடன் இருக்கும் போது அன்றைய அரபுகள், முன்வாசல் வழியாக வீட்டுக்குள் வராமல் கொல்லைப் புறமாக வருவார்கள்.
இது போன்ற மூட நம்பிக்கைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கும் அவர்கள், கஅபாவில் கும்மாளம் போட்டு சீட்டியடித்துக் கொண்டிருப்பார்கள். இறைவனை அஞ்ச மாட்டார்கள். இந்த மூட நம்பிக்கை தான் இங்கே (2:189) கண்டிக்கப்படுகின்றது.
(பார்க்க: புகாரி 1803, 4512)