24. கொலையாளியைக் கண்டறிய மாட்டை அறுத்தல்

மூஸா நபியவர்கள் காலத்தில் ஒருவர் கொல்லப்படுகிறார். கொலை செய்தது யார் என்பது தெரியவில்லை. கொலையாளியைக் கண்டு பிடித்துத் தருமாறு மூஸா நபியிடம் அவரது சமுதாயத்தினர் கேட்டனர். ஒரு மாட்டை அறுத்து, கொல்லப்பட்டவனின் மீது அடித்தால் அவன் உயிர் பெற்று தன்னைக் கொன்றவனை அடையாளம் காட்டுவான் என்று இறைவன் சொன்னான்.

ஏதாவது ஒரு மாட்டை அறுத்திருந்தாலே போதுமானது. தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு அவர்கள் தமக்குத் தாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இந்நிகழ்ச்சி யின் காரணமாகத் தான் இந்த அத்தியாயத்திற்கு "அந்த மாடு" என்று பெயர் வந்தது. (திருக்குர்ஆன் : 2:72).