இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
68:1. நூன்.2 எழுதுகோல் மீதும், அவர்கள் எழுதுவதன் மீதும் சத்தியமாக.
68:2. (முஹம்மதே!) உமது இறைவனின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரராக468 இல்லை.
68:3. உமக்கு முடிவுறாத கூலி உண்டு.
68:4. நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.
68:5, 6. உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும் பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள்.2668:7. உமது இறைவன் தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை நன்கு அறிந்தவன். நேர் வழி பெற்றோரையும் அவன் நன்கு அறிந்தவன்.
68:8. பொய்யெனக் கருதுவோருக்குக் கட்டுப்படாதீர்!
68:9. (முஹம்மதே!) நீர் வளைந்து கொடுத்தால் அவர்களும் வளைந்து கொடுக்க விரும்புகின்றனர்.
68:10. அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்!
68:11. அவன் குறை கூறுபவன்; கோள் சொல்லித் திரிபவன்.
68:12. நன்மையைத் தடுப்பவன்; வரம்பு மீறுபவன்; குற்றம் புரிபவன்.
68:13. முரடன். இதற்கு மேல் தவறான வழியில் பிறந்தவன்.
68:14. செல்வமும், ஆண் மக்களும் உடையவனாக அவன் இருக்கிறான் என்பதால் (அவனுக்குக் கட்டுப்படாதீர்).
68:15. அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் "முன்னோர்களின் கட்டுக் கதைகள்" எனக் கூறுகிறான்.
68:16. அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.37168:17. தோட்டத்துக்குரியோரை சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம்.484 "காலையில் அதை அறுவடை செய்வோம்" என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர்.
68:18. இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை.
68:19. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிடமிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது.
68:20. அது காரிருள் போல் ஆனது.
68:21, 22, 23, 24. "நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்" என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள்.2668:25. தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் காலைப் பொழுதை அடைந்தனர்.
68:26. அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது, "நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம்" என்று கூறினர்.
68:27. "இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்" (என்றனர்).
68:28. அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர் "நீங்கள் இறைவனைத் துதித் திருக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கூறவில்லையா?" என்று கேட்டார்.
68:29. "எங்கள் இறைவன் தூயவன்.10 நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்" என்றனர்.
68:30. அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள்.
68:31. "எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறி விட்டோமே!" என்றனர்.
68:32. "இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்" (என்றும் கூறினர்.)
68:33. இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின்1 வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?
68:34. (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின் இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.
68:35. கட்டுப்பட்டு நடப்பவர்களைக் குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?
68:36. உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?
68:37, 38. தேர்வு செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்று கூறுகின்ற, நீங்கள் வாசிக்கும் வேதம் உங்களுக்கு இருக்கிறதா?2668:39. நீங்கள் முடிவு செய்வது உங்களுக்கு உண்டு என நம்மிடம் செய்து கொண்ட, கியாமத் நாள்1 வரை செல்லத் தக்க, உடன்படிக்கைகள் உங்களிடம் உள்ளனவா?
68:40. அவர்களில் யார் இதற்குப் பொறுப்பு என்று அவர்களைக் கேட்பீராக!
68:41. அல்லது அவர்களுக்குத் தெய்வங்கள் உள்ளனரா? அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தமது தெய்வங்களைக் கொண்டு வரட்டும்!
68:42. கெண்டைக்கால் திறக்கப்பட்டு488 ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.24968:43. அவர்களின் பார்வைகள் தாழ்ந்திருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து விடும். அவர்கள் உடலில் குறை ஏதுமற்று இருந்த நிலையில் (உலகில்) ஸஜ்தாவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
68:44. என்னையும், இச்செய்தியைப் பொய்யெனக் கருதுபவனையும் விட்டு விடுவீராக! அவர்கள் அறியாத விதத்தில் அவர்களை விட்டுப் பிடிப்போம்.
68:45. அவர்களுக்கு அவகாசம் அளிப்பேன். எனது சூழ்ச்சி உறுதியானது.668:46. (முஹம்மதே!) நீர் அவர்களிடம் கூலி கேட்டு அதனால் அவர்கள் கடன் சுமையைச் சுமக்கப் போகிறார்களா?
68:47. அல்லது அவர்களிடம் மறைவானவை (பற்றிய அறிவு) இருந்து அவர்கள் பதிவு செய்து வைத்துள்ளார்களா?
68:48. உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர்(யூனுஸ்) போல் நீர் ஆகிவிடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார்.
68:49. அவரது இறைவனிடமிருந்து அவருக்கு அருள் கிடைத்திருக்காவிட்டால் அவர் இழிந்தவராக வெட்ட வெளியில் எறியப்பட்டிருப்பார்.
68:50. ஆயினும் அவரை அவரது இறைவன் தேர்வு செய்தான். அவரை நல்லவராக்கினான்.
68:51. (முஹம்மதே!) இந்த அறிவுரையைச் செவியுற்ற போது (ஏக இறைவனை) மறுப்போர் உம்மைத் தமது பார்வைகளால் வீழ்த்தப் பார்க்கின்றனர். "இவர் பைத்தியக்காரர்"468 என்றும் கூறுகின்றனர்.
68:52. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறு இல்லை.