315. மிஃராஜ் என்ற விண்வெளிப் பயணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் மரணித்து விட்ட மூஸா நபியவர்களை நபிகள் நாயகம் (ஸல்) எப்படி பார்த்திருப்பார்கள்? என்ற கேள்வி இவ்வசனத்தை (32:23) வாசிப்பவர்களுக்கு எழலாம்.
இறந்து போனவரை உயிரோடு இருப்பவர்கள் ஒருக்காலும் பார்க்க முடியாது; ஆயினும் இறைவன் தனது ஆற்றலைக் காட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை "மிஃராஜ்" என்ற விண்வெளிப் பயணம் அழைத்துச் சென்றான்.
அங்கே அவர்கள் மூஸாவை நபியைச் சந்தித்தார்கள். மற்றவர்களை விட அவர்களிடம் அதிகமான நேரம் உரையாடினார்கள். அந்த சந்திப்பைத் தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.
மூஸாவைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ள வேண்டாம்; நீர் உண்மையாகவே சந்தித்தீர்; நீர் சந்தித்தது அவரைத் தான் என்ற கருத்துப்பட அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகிறான்.
இது, மிஃராஜ் என்ற நிகழ்ச்சி நேரடியாகவே நடந்தது என்பதற்குரிய தெளிவான சான்றுகளில் ஒன்றாகும். (பார்க்க: திருக்குர்ஆன் 53:13-18)
மேலும் இது பற்றி விபரம் அறிய 267, 362 ஆகிய குறிப்புகளைக் காண்க!