391. நபிமார்களின் சொத்துக்களுக்கு வாரிசு கிடையாது
இவ்வசனத்தில் (19:5) ஜக்கரிய்யா நபியவர்கள் தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்தது பற்றிக் கூறப்படுகிறது.
அவரது சொத்துக்களுக்கு வாரிசு கேட்டதாக இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் நபிமார்களின் சொத்துக்களுக்கு அவர்களின் பிள்ளைகள் வாரிசாக முடியாது என்பது நபிமொழி. (புகாரி 2862, 2863, 3435, 3730, 3913)
தாம் செய்து வந்த ஆன்மிகப் பணியைத் தொடர்ந்து செய்வதற்காகவே தமக்கு ஒரு சந்ததியை வேண்டினார்கள். இதன் காரணமாகவே "பொறுப்பாளரை" எனக் குறிப்பிட்டார்கள்.
மேலும் "எனக்கும் யஃகூபுடைய குடும்பத்தாருக்கும் வாரிசாவார்" என்று ஸக்கரிய்யா நபி கூறியிருப்பதிலிருந்து சொத்துக்கு வாரிசு என்ற பொருளில் இது கூறப்படவில்லை என்பதை அறியலாம். ஏனெனில் யஃகூப் நபியின் சொத்துக்களுக்கு ஸக்கரிய்யா நபியின் மகன் வாரிசாக முடியாது.