இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று உள்ளதால் அதையே இதற்குப் பெயராக வைத்துள்ளனர்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
75:1. கியாமத் நாள்1 மீது சத்தியம் செய்கிறேன்.
75:2. குறை கூறிக் கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
75:3. மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?
75:4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.20875:5. ஆனால் அவனுக்கு (இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான்.
75:6. "கியாமத் நாள்1 எப்போது?" எனக் கேட்கிறான்.
75:7, 8, 9, 10. பார்வை நிலை குத்தும் போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும் போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும் போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்.2675:11. அவ்வாறில்லை! எந்தத் தப்பிக்கும் இடமும் இல்லை.
75:12. அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும்.
75:13. அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான்.
75:14, 15. மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறிய போதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.2675:16. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152 & 31275:17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.
75:18. எனவே நாம் அதை ஓதும் போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152 & 31275:19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
75:20. அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.
75:21. மறுமையை விட்டு விடுகிறீர்கள்.
75:22. அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
75:23. தமது இறைவனைப் பார்த்துக்488 கொண்டிருக்கும்.2175:24. சில முகங்கள் அந்நாளில் சோக மயமாக இருக்கும்.
75:25. தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.
75:26, 27. அவ்வாறில்லை! உயிர் தொண்டைக் குழியை அடைந்து விடும் போது "மந்திரிப்பவன் யார்?" எனக் கூறப்படும்.2675:28. "அதுவே பிரிவு" என்று அவன் விளங்கிக் கொள்வான்.
75:29. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
75:30. அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.
75:31. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.
75:32. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.
75:33. பின்னர் தனது குடும்பத்தினருடன் கர்வமாகச் சென்றான்.
75:34. உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!
75:35. பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!
75:36. வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?
75:37. அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?
75:38. பின்னர் கருவுற்ற சினை முட்டையானான்.365 பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான்.
75:39. அவனிலிருந்து437 ஆண் பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.
75:40. இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா?