377. பிரச்சாரத்திற்குக் கூலி

இவ்வசனத்தில் (42:23) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரச்சாரத்திற்காக மக்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை என்பது கூறப்படுவதுடன், இன்னொரு வகையான கூலியை அவர்கள் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த மக்களுக்குப் பிரச்சாரம் செய்தார் களோ அந்த மக்களில் நெருங்கிய உற வினர்களும் இருந்தனர். அந்த உறவி னர்களும் கூட நபிகள் நாயகத்தை ஆரம்பத்தில் எதிர்த்து வந்தனர்.

அவர்களிடம், "நான் உங்களின் உறவினராக இருப்பதால் நீங்கள் என் மீது செலுத்த வேண்டிய அன்பை நான் கூலியாகக் கேட்கிறேன்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கூறுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

நாம் சத்தியப் பிரச்சாரம் செய்யும் போது உறவினர்களிடம் உறவு முறையைச் சொல்லி உதவி கேட்கலாம் என்பதை இதிலிலிருந்து விளங்கலாம்.

இது போல் 25:57 வசனத்தில் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளும் மக்களையே கூலியாகக் கேட்கிறேன் என்று கூறுமாறு இறைவன் கட்டளை யிடுகிறான். மனிதர்கள் இறையன்பைப் பெறுவது தான் என் பிரச்சாரத்துக்கான கூலியே தவிர எனக்கு ஏதும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பது இதன் கருத்தாகும்.