210. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர்
மிகவும் நெருக்கடியான, சிரமமான கட்டத்தில் நடைபெற்ற போர்களில் "தபூக்" போரும் ஒன்று. இப்போரில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தனர். ஆயினும் மூன்று நபித்தோழர்கள் போருக்குப் புறப்படவில்லை. பிறகு சென்று போரில் நபிகள் நாயகத்துடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து பயணத்தைத் தாமதப்படுத்திய அம்மூவரும் கடைசி வரை அப்போரில் பங்கெடுக்கவில்லை.
அம்மூவருடனும் எந்தவித உறவும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முஸ்லிம்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அம்மூவரும் தமது செயலுக்காக மிகவும் வருந்தினார்கள். எனவே அவர்களை இறைவன் மன்னித்தான். அதைத் தான் இங்கே (9:118) அல்லாஹ் கூறுகிறான். (புகாரி 4418, 4676, 4677, 6690)