179. உலகம் படைக்கப்பட்ட நாட்கள்
வானங்களையும், பூமியையும் அல்லாஹ் ஆறு நாட்களில் படைத்ததாக 7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.
இதன் பொருள் வானங்கள், பூமி மட்டும் அல்ல. வானங்களுக்கும் பூமிக்கும் இடைப்பட்டவைகளையும் சேர்த்தே அல்லாஹ் கூறுகிறான்.
25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் வானங்களையும், பூமியையும் என்பதுடன் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.
பூமியைப் படைக்க இரண்டு நாட்கள் (திருக்குர்ஆன் 41:9), வானங்களைப் படைக்க இரண்டு நாட்கள் (திருக்குர்ஆன் 41:12), என்று கூறப்படுவதை இதற்கு முரணானது என்று கருதக் கூடாது.
பூமியைப் படைத்து அதில் மலைகளை நிறுவியது, உணவுகளை அதில் நிர்ணயித்தது ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள் என்று 41:10 வசனம் கூறுகிறது.
பூமியைப் படைக்க இரு நாட்கள், அதில் மனிதன் வாழத் தேவையான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள், வானங்களைப் படைக்க இரு நாட்கள் என ஆறு நாட்களில் அனைத்தையும் அல்லாஹ் படைத்தான்.
(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 7:54, 10:3, 11:7, 41:9,10, 41:12, 25:59, 32:4, 50:38, 57:4)