371. மூக்கின் மேல் அடையாளம்

இவ்வசனத்தில் (68:16) மனிதனைத் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்கு மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.

மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் இரண்டு. ஒன்று ரேகைகள். இதை அனைவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆயினும் ஆய்வு செய்து எந்த மனிதனின் ரேகை என்பதைக் கண்டு கொள்ளலாம். ஒருவரின் ரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காது.

அனைவராலும் தெரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு அடையாளம் மூக்கு. எவ்வளவு நெருக்கமான மனிதராக இருந்தாலும் மூக்கை மறைத்துக் கொண்டால் துல்லியமாக அடையாளம் காண முடியாது.

கைரேகை மூலம் ஒருவரைக் கண்டுபிடிப்பதைவிட மூக்கைப் பல கோணங்களில் ஸ்கேன் செய்வதன் மூலம் எந்த மனிதரையும் துல்லியமாகக் கண்டறியும் போட்டோ பேஸ் என்ற தொழில் நுட்பம் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்ற சொல் எவ்வளவு பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்