390. பார்வையற்றவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவார்களா?
இவ்வுலகில் பார்வையற்றவராக இருப்பவர் மறுமையில் பார்வையற்ற வராக எழுப்பப்படுவார் என்று இவ் வசனத்தை (17:72) புரிந்து கொள்ளக் கூடாது.
சத்தியத்தை ஏற்க மறுக்கும் கருத்துக் குருடராக இருப்பவர்கள் மறுமையில் குருடர்களாக எழுப்பப்படுவார்கள் என்பதே இதன் கருத்தாகும். இதை 17:97, 20:124,125 ஆகிய வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.