இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஹுமஸா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
104:1. குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.
104:2. அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான்.
104:3. தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான்.
104:4. அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.
104:5. ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
104:6. மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.
104:7. அது உள்ளங்களைச் சென்றடையும்.
104:8, 9. நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.26