333. மனிதன் வளர்வதும் தேய்வதும்

மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து, நடையை இழந்து படுக்கையில் விழுகிறான். நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தை போன்று ஆகி விடுகிறான்.

மனிதன் நடுத்தர வயது வரை ஏறுமுகமாக சிறிது சிறிதாக வளர்ந்து வருகிறான். நடுத்தர வயதை அடைந்த உடன் இறங்குமுகமாகத் தேய்ந்து இறுதியில் பச்சிளம் குழந்தை படுக்கையில் மலஜம் கழித்தது போன்ற நிலையை அடைகிறான். இதைத் தான் (36:68) இவ்வசனம் படைப்பில் இறங்கு முகம் என்று கூறுகிறது.