268. எதிரிகள் அழிக்கப் படுவது பற்றிய முன்னறிவிப்பு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரை விட்டு வெளியேற்றிய அந்தத் தலைவர்கள் மிகக் குறைவாகவே அதன் பிறகு தங்கியிருப்பார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விரட்டுவதற்குக் காரணமாக இருந்த அபூஜஹ்ல், உத்பா, ஷைபா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அனைவரும் முதல் போர்க் களத்திலேயே கொன்று குவிக்கப்பட்டனர்.
நபிகள் நாயகத்தை விரட்டிவிட்டு அவர்கள் நீண்ட நாட்கள் அவ்வூரில் தங்கியிருக்க முடியாது என்ற முன்னறிவிப்பை இவ்வசனம் (17:76) கூறுகிறது.