254. பிறரது சுமையை சுமக்க முடியுமா?
ஒவ்வொரு மனிதனும் தனது நன்மை தீமைகளைத் தான் சுமப்பான்; ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்கவே முடியாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.
இவ்வசனம் (16:25) இந்தக் கோட்பாட்டுக்கு எதிரானது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஒருவன் பிறரை வழி கெடுத்தால் வழி கெடுக்கப்பட்டவனின் சுமையைச் சுமந்து தான் ஆக வேண்டும். இது பிறர் பாவத்தைச் சுமப்பதல்ல. வழி கெடுத்த பாவத்தைச் சுமப்பது தான்.