336. தீமையில் பங்கெடுக்காதிருக்கப் பொய் சொல்லுதல்
இவ்வசனத்தில் (37:89), "நான் நோயாளியாக இருக்கிறேன்" என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது.
இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் 4371)
இப்ராஹீம் நபியவர்கள் நோயாளியாக இல்லாவிட்டாலும், இறைவனுக்காக நோயாளி என்று கூறியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது.
ஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது.
மேலும் விபரத்திற்கு 162, 236 ஆகிய குறிப்புகளைக் காண்க!