153. வானவர்களை அனுப்புதல் என்பதன் பொருள்
வானவர்களைப் படைத்து அவர்களுக்கான பணிகளை இறைவன் ஒப்படைத்துள்ளான். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்காக வானவர்கள் பூமிக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.
அந்தப் பணிகள் அல்லாமல் வானவர்களை அனுப்புவது என்றால் குற்றம் புரிவோரை அழிக்கவே அனுப்புவான் என்பது தான் இதன் பொருள்.
எனவே ஏற்கனவே பணிகள் ஒதுக்கப்பட்ட வானவர்களை இவ்வசனங்கள் (6:8, 16:33) குறிக்காது.