251. பணிவாக நடக்கக் கட்டளை
திருக்குர்ஆன் பல இடங்களில் (15:88, 17:24, 26:215) சிறகைத் தாழ்த்துமாறு மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறது. இது பணிவைக் குறிப்பிடும் சொல்லாகும்.
சிறகை விரிக்கும் போது பறவைகள் உயரத்திற்குச் செல்கின்றன. சிறகைத் தாழ்த்தும் போது பறவைகள் கீழே வருகின்றன. எனவே சிறகை விரித்தல் என்பதை ஆணவத்திற்காகவும், சிறகைத் தாழ்த்துவது என்பதை பணிவுக்காகவும் அரபு மொழியில் பயன்படுத்துகின்றனர்.