226. ஐவேளைத் தொழுகை
இவ்வசனத்தில் (11:114) இரவின் பகுதிகள் என்று பன்மையாகக் கூறப்படுகிறது.
அரபு மொழியில் பன்மை என்பது குறைந்தது மூன்றாகும். இரண்டைக் குறிக்க இருமை எனத் தனிச் சொல் அமைப்பு உள்ளது. எனவே இரவில் மட்டும் குறைந்தது மூன்று தொழுகைகள் இருந்தால் தான் "இரவின் பகுதிகளிலும்" என்று கூற முடியும்.
மஃரிப், இஷா, சுபுஹ் ஆகிய மூன்று தொழுகைகளை இது குறிக்கின்றது. பகலின் இரு ஓரங்கள் என்பது இரண்டு தொழுகைகளைக் குறிக்கிறது. லுஹர், அஸர் என்ற இரண்டு தொழுகைகளே இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம்.
ஐந்து வேளைத் தொழுகை உண்டு என்று திருக்குர்ஆன் மறைமுகமாகக் கூறுவதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். மூன்று வேளைத் தொழுகை தான் என்று கூறுவோர் குர்ஆனுக்கும், நபி மொழிக்கும் முரண்படுகின்றனர்.
(அதிக விபரத்திற்கு 71வது குறிப் பையும், 30:17,18 வசனங்களையும் காண்க!)