139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல!
இவ்வசனம் (9:34) பொருளாதாரத்தைச் சேமித்து வைத்துக் கொள்வதை குற்றம் எனக் கூறுவதாக கருதக் கூடாது. ஏனெனில் திருக்குர்ஆனின் பல்வேறு வசனங்கள் பொருளாதாரத்தைத் திரட்டவும், சேமிக்கவும் தூண்டுகின்றன.
(பார்க்க: திருக்குர்ஆன் 4:29, 4:32, 4:34, 9:103, 16:71, 17:6, 33:27, 62:10, 71:12, 73:20)
(அதிக விபரங்களுக்கு பொருள் அட்டவணை - பொருளாதாரம் என்ற தலைப்பில் காண்க!)
இவ்வசனத்தில் பொருளாதாரத்தைத் திரட்டுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
ஆயினும் நபிவழித் தொகுப்புகளில் இவ்வசனம் ஸகாத் எனும் தர்மம் கடமையாக்கப்ப டுவதற்கு முன்பிருந்த நிலையெனவும், ஸகாத் கடமையாக்கப்பட்ட பின் பொருளாதாரத்தைத் திரட்டுவோர் அதற்குரிய ஸகாத்தைக் கொடுத்து விட்டால் அவர்கள் மீது மறுமையில் எந்தக் குற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. (நூல்: புகாரி 1404)
திருக்குர்ஆனைச் சரியான முறையில் விளங்க நபிவழி அவசியம் என்பதற்கு இதுவும் சான்றாகும்.