இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
84:1. வானம் பிளந்து விடும் போது,
84:2. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும் போது,
84:3. பூமி நீட்டப்படும் போது,
84:4. தன்னிடம் உள்ளதை வெளிப்படுத்தி அது வெறுமையாகி விடும் போது,
84:5. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும் போது,
84:6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய்.
84:7, 8. யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.2684:9. அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.
84:10, 11. முதுகுக்குப் பின் புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.2684:12. நரகிலும் கருகுவான்.
84:13. அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
84:14. "தான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்" என்று அவன் எண்ணினான்.
84:15. அவ்வாறில்லை! அவனது இறைவன் அவனைப் பார்ப்பவனாக488 இருந்தான்.
84:16. அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
84:17, 18. இரவின் மீதும் அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!
84:19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.
84:20. அவர்கள் நம்பிக்கை கொள்ளா மலிருக்க என்ன நேர்ந்தது?
84:21. அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும் போது ஸஜ்தாச் செய்வதில்லை.39684:22. மாறாக (ஏக இறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுகின்றனர்.
84:23. அவர்கள் மறைப்பதை அல்லாஹ் அறிவான்.
84:24. எனவே அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை எச்சரிப்பீராக!
84:25. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.