178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்
இந்த வசனத்தில் (7:49) "நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு அச்சமும் இல்லை; கவலைப்படவும் மாட்டீர்கள்" என்ற சொற்றொடர் தடுப்புச் சுவர் மீது இருப்பவர்களை நோக்கி அல்லாஹ் கூறும் வார்த்தை என்று சிலர் கருத்து கொள்கின்றனர்.
இந்தக் கருத்துப்படி தடுப்புச் சுவர் மீது இருப்பவர்கள் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்.
"இவர்களுக்குத் தான் அல்லாஹ் அருள்புரிய மாட்டான் என்று சத்தியம் செய்து கூறினீர்களா? சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறப்பட்டு விட்டதே?" என்று தடுப்புச் சுவர் மீது இருப்போர் சொர்க்கவாசிகளைப் பற்றி நரகவாசிகளிடம் கூறும் வார்த்தைகள் எனவும் கருத்துக் கொள்ளப்படுகிறது.
இரு விதமாகக் கருத்து கொள்ளவும் இவ்வசனம் இடம் தருகிறது.