130. ஸகாத் கட்டாயக் கடமை

திருக்குர்ஆனின் 9:60 வசனத்தில் கூறப்படும் தர்மங்கள் என்பது கட்டாயக் கடமையான ஸகாத்தைக் குறிப்பிடுவது ஆகும்.

ஏனெனில் இவ்வசனத்தின் இறுதியில் "இது அல்லாஹ்வின் கட்டாயக் கடமை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வசனத்தில் கூறப்படும் எட்டு வழிகளில் மட்டும் செலவிட வேண்டுமென்பது ஸகாத்துக்குரிய சட்டம்.

கட்டாயக் கடமையான ஸகாத் அல்லாத மற்ற தர்மங்களை இந்த எட்டு வழிகள் அல்லாத வேறு நல்ல பணிகளுக்காகவும் செலவிடலாம்.

அதிக விபரங்களுக்கு இதே பகுதியில் 204, 205, 206 ஆகிய குறிப்புகளைக் காண்க!