322. நபிகள் நாயகத்தின் மனைவியரை மணக்கக் கூடாது

பொதுவாக இஸ்லாம் பெண்களின் மறுமணத்தை ஆதரிக்கிறது, ஆர்வமூட்டுகிறது. அவ்வாறிருக்க நபிகள் நாயகத்தின் மனைவியரை மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பிறகு மற்றவர்கள் மணக்கக் கூடாது என்றால் அப்பெண்களின் மறுமண உரிமையை இது பறிப்பதில்லையா? என்று சிலர் கேட்கலாம். (திருக்குர்ஆன் 33:6, 33:53)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மணந்து கொண்ட பெண்களிடம் "விரும்பினால் உங்களை சந்தோஷமாக விட்டு விடுகிறேன்" என்று நபிகள் நாயகத்தை அல்லாஹ் கூறச் சொல்கிறான்.

நபிகள் நாயகத்தை மணந்து, நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் வரை அவரது மனைவியராகவே இருந்தால் தமக்கு மறுமணம் செய்யும் வாய்ப்பு இருக்காது என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டே தான் அப்பெண்கள் நபிகள் நாயகத்தின் மனைவியராக வாழ்க்கை நடத்தச் சம்மதித்தார்கள் என்பதால் அப்பெண்களின் மறுமண உரிமையை இது பறிப்பதாக ஆகாது.