இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
94:1. உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா?
94:2, 3. (முஹம்மதே!) உமது முதுகை முறித்துக் கொண்டிருந்த உமது சுமையை உம்மை விட்டும் நாம் இறக்கவில்லையா?2694:4. உமது புகழை உயர்த்தினோம்.
94:5. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
94:6. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
94:7. எனவே ஓய்வெடுத்ததும் தயாராவீராக!
94:8. உமது இறைவனிடம் ஆசை வைப்பீராக!