உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே பெயராகச் சூட்டியுள்ளனர்.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
79:1. பலமாகக் கைப்பற்றுவோர் (வானவர்கள்) மீது ஆணையாக!
79:2. எளிதாகக் கைப்பற்றுவோர் மீது ஆணையாக!
79:3, 4, 5. நீந்திச் செல்வோர் மீதும், முந்திச் செல்வோர் மீதும், காரியங்களை நிர்வாகிப்போர் மீதும் ஆணையாக!2679:6. அந்தப் பெரு நடுக்கத்தை ஏற்படுத்தக் கூடியது (ஸூர் ஊதுதல்) நிகழும் நாள்!
79:7. அடுத்தது (இரண்டாம் ஸூர்), அதைத் தொடர்ந்து வரும்!
79:8. அந்நாளில் சில உள்ளங்கள் கலக்கம் கொண்டிருக்கும்.
79:9. அவற்றின் பார்வைகள் தாழ்ந்திருக்கும்.
79:10. "குழியிலிருந்து நாம் எழுப்பப்படுவோமா?" என்று கேட்கின்றனர்.
79:11. மக்கிப் போன எலும்புகளாக ஆகி விட்ட பிறகுமா?
79:12. அப்படியானால் அது இழப்பை ஏற்படுத்தும் மீளுதல் தான்" என்றும் கூறுகின்றனர்.
79:13. அது ஒரே ஒரு சப்தம் தான்!
79:14. உடனே அவர்கள் வெட்ட வெளியில் நிற்பார்கள்.
79:15. மூஸாவைப் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
79:16. அவரை அவரது இறைவன் "துவா" எனும் தூய பள்ளத்தாக்கில் அழைத்தான்.
79:17. "நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக! அவன் வரம்பு மீறி விட்டான்"
79:18, 19. "நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா? நான் உனது இறைவனை நோக்கி வழி காட்டுகிறேன்! (இறைவனை) அஞ்சிக் கொள்!" எனக் கூறுவீராக" (என்று இறைவன் கூறினான்).
79:20. அவனுக்கு (மூஸா) மிகப் பெரிய சான்றைக் காட்டினார்.
79:21. அவன் பொய்யெனக் கருதி பாவம் செய்தான்.
79:22. பின்னர் விரைவாகப் பின்வாங்கினான்.
79:23. (மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான்.
79:24. நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான்.
79:25. அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.
79:26. (இறைவனை) அஞ்சுபவருக்கு இதில் படிப்பினை உண்டு.
79:27. படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்.
79:28. அதன் முகட்டை உயர்த்திச் சீராக்கினான்.
79:29. அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான்.
79:30. இதன் பின்னர் பூமியை விரித்தான்.
79:31. அதிலிருந்து அதற்கான தண்ணீரையும், மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்.
79:32. மலைகளை முளைகளாக நாட்டினான்.24879:33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்க்கை வசதிக்காக (இவற்றை ஏற்படுத்தினான்)
79:34, 35. மாபெரும் அமளி ஏற்படும் போது மனிதன் தான் செய்ததைப் பற்றி அந்நாளில் எண்ணிப் பார்ப்பான்.2679:36. காண்போருக்கு (அருகில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
79:37, 38, 39. யார் வரம்பு மீறி, இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானோ அவனுக்கு நரகமே தங்குமிடம்.2679:40, 41. யார் தமது இறைவன் முன்னே நிற்பது பற்றி அஞ்சி, மனோ இச்சையை விட்டும் தன்னை விலக்கிக் கொண்டாரோ சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.2679:42. (முஹம்மதே!) யுக முடிவு நேரம் பற்றி அது எப்போது ஏற்படும்? என உம்மிடம் கேட்கின்றனர்.
79:43. அது பற்றிய விளக்கம் உம்மிடம் எங்கே இருக்கிறது?
79:44. அதன் முடிவு உமது இறைவனிடமே உள்ளது.
79:45. அதை அஞ்சுவோருக்கு நீர் எச்சரிப்பவரே.
79:46. அதை அவர்கள் காணும் போது ஒரு மாலைப்பொழுதோ, அல்லது அதன் காலைப்பொழுதோ தவிர வாழவில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்.