தடாகம்

மொத்த வசனங்கள் : 3

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
108:1. (முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.388
108:2. எனவே உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக!427
108:3. உமது எதிரி தான் சந்ததியற்றவன்.