127. அச்சமற்ற நிலையில்...

போர்க்களத் தொழுகையைப் பற்றிக் கூறிவிட்டு அச்சமற்ற நிலையை அடைந்தால் தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 4:103) கூறுகிறான்.

ஆனால் அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழ வேண்டும் என்பது தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அச்சமற்ற நிலையில் எவ்வாறு தொழுவது என்று கூறப்படவில்லை.

நபிகள் நாயகத்தின் விளக்கம் அவசியம் என்பதை இந்த வசனம் வலியுறுத்துகின்றது.

அதிக விபரத்திற்கு 72வது குறிப்பைக் காண்க!