434. இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் என்பது என்ன?
இந்த வசனங்களில் (83:8, 83:19) இல்லிய்யீன், ஸிஜ்ஜீன் எனும் பதிவேடுகள் பற்றிக் கூறப்படுகிறது.
மனிதர்கள் இறந்தவுடன் அவர் களது மரணத்தை இறைவன் பதிவு செய்கிறான். மனிதன் மரணித்தவுடன் அவனது உயிர் உடனே மேலுலகம் கொண்டு செல்லப்படுகிறது.
நல்லவரின் உயிர் வானுலகில் உள்ள இல்லிய்யீன் என்ற பதிவேட்டில் எழுதப்பட்டுப் பின்னர் மண்ணுலகுக்குக் கொண்டு வரப்படுகிறது. இது விநாடி நேரத்தில் நடந்து விடும். இதன் பிறகே மண்ணறையில் வைத்து விசாரணை நடக்கிறது.
கெட்டவரின் உயிர் "இவனைப் பூமியின் ஆழத்துக்குக் கொண்டு சென்று அங்குள்ள ஸிஜ்ஜீன் எனும் ஏட்டில் பதிவு செய்யுங்கள்" என்று இறைவன் கூறுவான் என நபிகள் நாயகம் (ஸல்) விளக்கியுள்ளனர்.
மேலும் விபரம் அறிய 177வது குறிப்பைக் காண்க!