277. மவுன விரதம் உண்டா?
அன்றைய சமுதாயத்தில் பேசாமல் மவுன விரதம் கடைப்பிடிப்பதும் ஒரு வகை நோன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தது. அதைத் தான் மரியம் (அலை) அவர்கள் கடைப்பிடித்தார்கள்.
(திருக்குர்ஆன் 19:26)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட சட்டத்தில், பேசாமல் இருப்பது ஒரு வணக்கமல்ல.
வணக்க வழிபாடுகளுக்குத் தான் நேர்ச்சை செய்ய வேண்டும். பேச மாட்டேன்; சிரிக்க மாட்டேன்; உண்ண மாட்டேன் என்றெல்லாம் நேர்ச்சை செய்வது மார்க்கத்தில் உள்ளதல்ல.
நமக்குரிய சட்டத்தில் இவ்வாறு செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள்.
(பார்க்க: புகாரி 6704)