25. முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு
தவ்ராத், இஞ்ஜீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு இருந்தது. (பார்க்க : திருக்குர்ஆன் 7:157, 48:29, 61:6)
முஹம்மது நபி அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிப்து, பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர்.
முஹம்மது நபி அவர்கள் மதீனா வரும் போது அவர்களை முதலில் ஏற்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேறினர். ஆனால் அவர்களின் வாரிசுகளோ முஹம்மது நபி அவர்கள் வந்த போது அவர்களை இறைத் தூதர் என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி மற்றும் செல்வாக்குப் போய் விடும் என்று அஞ்சினர். அது தான் இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது.