வேகமாக ஓடும் குதிரைகள்

மொத்த வசனங்கள் : 11

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
100:1, 2, 3, 4, 5. மூச்சிறைத்து வேகமாக ஓடுபவற்றின் மீதும், தீப்பொறியைப் பறக்கச் செய்பவற்றின் மீதும், அதிகாலையில் தாக்குதல் நடத்துபவை மீதும், அதனால் புழுதியைப் பரப்பி வருபவை மீதும், படைகளுக்கு மத்தியில் ஊடுருவிச் செல்பவை மீதும் சத்தியமாக!
100:6. மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.
100:7. அவனே இதற்குச் சாட்சியாக இருக்கிறான்.
100:8. அவன் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறான்.
100:9, 10, 11. மண்ணறைகளில் உள்ளவை வெளிப்படுத்தப்படும் போது, உள்ளங்களில் உள்ளவை திரட்டப்படும் போது, அவர்களின் இறைவன் அவர்களைப் பற்றி அந்நாளில் நன்கறிந்தவன் என்பதை அவன் அறிந்து கொள்ள வேண்டாமா?26