221. தண்ணீர் பொங்கிய போது...

"தன்னூர்" என்ற சொல் இங்கே (திருக்குர்ஆன் 11:40, 23:27) இடம் பெற்றுள்ளது. இது வேற்றுமொழிச் சொல்லாகும். பெரும்பாலான அறிஞர்கள் இதற்கு அடுப்பு என்று பொருள் கொண்டுள்ளனர். பாரசீகம், உருது ஆகிய மொழிகளில் அடுப்பு என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தண்ணீர் என்பது தான் இதன் பொருள் என்று சில நபித்தோழர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது தான் பொருத்தமாக இருக்கிறது. தண்ணீர் பொங்குவது தான் அழிவுக்கான அறிகுறியும், உடனே தெரிந்து விடக் கூடிய அறிகுறியுமாகும். எனவே நாமும் தண்ணீர் என மொழி பெயர்த்துள்ளோம்.