இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக வைக்கப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
92:1. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
92:2. பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக!
92:3. ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன் மீது சத்தியமாக!
92:4. உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது.
92:5, 6, 7. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம்.2692:8, 9, 10. யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்.2692:11. அவன் விழும் போது அவனது செல்வம் அவனைக் காக்காது.
92:12. நேர் வழி நம்மைச் சேர்ந்தது.
92:13. மறுமையும், இம்மையும் நமக்கே உரியது.
92:14. கொளுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.
92:15. துர்பாக்கியசாலியைத் தவிர வேறு யாரும் அதில் கருக மாட்டார்கள்.
92:16. அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்.
92:17. இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார்.
92:18. அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.
92:19, 20. மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.2692:21. பின்னர் அவர் திருப்தியடைவார்.