295. முதல் மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாம் என்பது முதல் மனிதர் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகின்ற ஒரு கொள்கையாகும்.

"அகில உலகுக்கும் ஒரே ஒரு இறைவன் மட்டுமே இருக்கிறான்; மறுமை இருக்கிறது" என்பன போன்ற அடிப்படையான கொள்கைகள், முதல் மனிதர் காலத்திலிருந்து நபிகள் நாயகம் (ஸல்) வரை அனைவருக்கும் ஒரே விதமாகவே வழங்கப்பட்டன. ஒரு சில உட்பிரிவுகளில் மட்டுமே வித்தியாசமான சட்டங்கள் சிலருக்கு அருளப்பட்டன.

எனவே நபிகள் நாயகத்திற்கு முன் உலகிற்கு அனுப்பப்பட்ட தூதர்கள் எந்த மார்க்கத்தைப் போதித்தார்களோ அந்த மார்க்கமும் இஸ்லாம் மார்க்கமே.

திருக்குர்ஆன் 22:78 வசனம் இக்கருத்துக்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. முந்தைய நபிமார்களின் சமுதாயமும் முஸ்லிம் சமுதாயமே என்பதற்குக் கீழ்க்கண்ட வசனங்களும் சான்றாக உள்ளன.

(பார்க்க: திருக்குர்ஆன் 2:132, 3:64, 3:80, 3:102, 5:111, 6:163, 7:126, 10:72, 10:84, 22:78, 43:69, 46:15)