267. நபிக்குக் காட்டிய காட்சி என்ன?

இவ்வசனத்தில் (17:60) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்குச் சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.

நபிகள் நாயகத்தை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பிறகு மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் எனக் குறிப்பிடுகிறான்.

அக்காட்சியை நபிகள் நாயகத்துக்குக் காட்டி அதை அவர்கள் கூறும் போது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்துப் பார்த்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீனமான நம்பிக்கை உடையவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப் பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் சான்றாக உள்ளன.

(இக்குறிப்புக்குரிய வசனங்கள்: 53:13-18, 32:23)

இதைப் பற்றி அதிக விபரம் அறிய 315, 362 வது குறிப்புகளைக் காண்க!