370. நரகின் எரிபொருட்கள்

அல்லாஹ்வையன்றி யாரை வணங்கினார்களோ, எதை வணங்கினார்களோ அவர்கள் நரகின் எரிபொருட்களாவர் என்று 21:98 வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

அப்படியானால் ஈஸா நபி உள்ளிட்ட எத்தனையோ நபிமார்கள் வணங்கப்பட்டனர். அவர்களும் நரகின் எரி பொருட்களா என்ற கேள்வி எழும். இக் கேள்விக்கான விடை தான் இவ்வசனம். (21:101) நபிமார்கள் போன்ற நல்லோர்கள் வணங்கப்பட்டாலும் வணங்கியோர் தான் நரகை அடைவார்களே தவிர நபிமார்கள், நல்லவர்கள் அடைய மாட்டார்கள் என்பதை இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.