28. வானவர்கள் சூனியத்தைக் கற்றுத்தரவில்லை

பில்லி, சூனியம் என்று மக்களை ஏமாற்றி வந்த யூதர்கள் அதற்கு அல்லாஹ்வின் அங்கீகாரம் உள்ளது என்று காட்டுவதற்காக ஜிப்ரீல், மீக்காயீல் என்ற இரு வானவர்கள் வழியாகவே இது தமக்குக் கிடைத்தது எனக் கூறிவந்தனர். அந்த வானவர்களிடமிருந்து ஸுலைமான் நபிக்கு வந்து, அவர் வழியாகத் தமக்கு வந்தது என்றும் பித்தலாட்டம் செய்து வந்தனர்.

எனவே தான் இதற்கும் ஸுலைமான் நபிக்கும் ஜிப்ரீல், மீக்காயீல் ஆகிய இரு வானவர்களுக்கும் இதில் சம்பந்தம் இல்லை என்றும் இறைவன் மறுக்கிறான். (திருக்குர்ஆன் 2:102)

சூனியம் பற்றி அதிக விபரமறிய 357வது குறிப்பைக் காண்க!