51. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்?
இந்த வசனத்தில் (2:189) பிறைகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் "ஹிலால்" எனும் மூலச்சொல் இடம் பெற்றுள்ளது. இது சந்திரன் எனும் துணைக் கோளைக் குறிக்காது. மாறாக, நிலவில் ஏற்படும் வளர் நிலை, தேய் நிலைகளைக் குறிப்பதாகும். எனவே தான் பிறைகள் எனப் பன்மையாகக் கூறப்படுகிறது