220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்

பொதுவாக மனிதர்கள் பல விஷயங்களை மறப்பவர்களாக உள்ளனர். இத்தகைய மறதியிலிருந்து நபிமார்களும் விதிவிலக்குப் பெற்றவர்கள் அல்லர்.

ஆயினும் இறைவன் புறத்திலிருந்து வருகின்ற தூதுச் செய்திகளை நபிமார்கள் மறந்து விட்டால் மக்களுக்கு தூதுச் செய்தியில் ஒரு பகுதி கிடைக்காமல் போய் விடும். எனவே தான் இவ்வசனத்தில் (87:6) "நாம் ஓதிக்காட்டுவோம்; நீர் மறக்க மாட்டீர்" எனக் கூறி வேதத்தைப் பொறுத்த வரை நபிகள் நாயகத்திற்கு மறதி ஏற்படாது எனக் கூறப்படுகிறது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனில் எந்த ஒன்றையும் மறதியின் காரணமாக நமக்குக் கூறாமல் விட்டிருப்பார்களோ என்று கருதக் கூடாது என்ற கருத்தையும் இவ்வசனம் உள்ளடக்கி இருக்கிறது.