169. குர்ஆனின் உயர்ந்த நடை
திருக்குர்ஆன் மிக உயர்ந்த தரத்தில் அமைந்த வேதமாகும். இவ்வேதத்தில் குறை காண முடியாத எதிரிகள் "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறரிடமிருந்து கற்று இறைவேதம் என்று கூறுகிறார்" என்று தான் விமர்சிக்க முடிந்தது. அதே நேரத்தில் அறிவுடைய மக்கள் இக்குர்ஆன் மூலம் ஈர்க்கப்பட்டனர் என்பதும் இவ்வசனத்தில் (6:105) கூறப்படுகிறது.
அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 142வது குறிப்பையும் காண்க!