இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நில அதிர்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
99:1. பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும் போது,
99:2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும் போது,
99:3. இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும் போது,
99:4, 5. அந்நாளில்1 தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.2699:6. அந்நாளில்1 மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.
99:7. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
99:8. அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.