இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் அஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
103:1. காலத்தின் மீது சத்தியமாக!
103:2. மனிதன் இழப்பில் இருக்கிறான்.
103:3. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.