283. முன்னோரைக் காட்டி பிரச்சாரத்தை முடக்குதல்
இவ்வசனத்தில் (20:51,52) மூஸா நபியிடம், "முன்னோர்களின் கதி என்ன?" என்று கேட்கப்பட்டதற்கு, "அது இறைவனுக்குத் தான் தெரியும்" என்று அவர்கள் விடையளித்ததாகக் கூறப்படுகிறது.
சத்தியத்தை எடுத்துச் சொல்லும் போது "சத்தியத்தை ஏற்காத எங்களது முன்னோர்களெல்லாம் நரகவாசிகளா?" என்று எல்லாக் காலத்திலும் சத்தியத்திற்கு எதிரானவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.
"அது என் இறைவனுக்குத் தான் தெரியும்; மறுமையில் அவர்களின் நிலை என்னவென்று எனக்குத் தெரியாது; அது பற்றி நான் பதில் சொல்ல மாட்டேன்" என்று சத்திய வழியில் நிற்பவர்கள் பதில் அளித்திட வேண்டும் என்பதற்கு இதை ஆதாரமாகக் கொள்ளலாம்.