328. விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே ஈர்ப்புவிசை
இவ்வசனத்தில் (35:41) வானங்களும், பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
வானங்களும், பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவை சிதறிச் சின்னா பின்னமாகி விடும்.
இதுவும் இன்றைய அறிவியல் உண்மையைப் பறை சாற்றும் வசனமாக அமைந்துள்ளது.
அதிக விபரத்திற்கு இதே பகுதியில் 240வது குறிப்பைக் காண்க!