103. இரண்டறக் கலந்த நயவஞ்சகர்கள்

தங்களையும் முஸ்லிம்கள் என்று கூறி நயவஞ்சகர்கள் ஏமாற்றி வந்தனர். எனவே உண்மை முஸ்லிம்கள் யார்? போலிகள் யார்? என்பதைக் கண்டறிய முடியாமல் இரு வகையினரும் கலந்திருந்தனர்.

நெருக்கடியான நேரத்தில் போர்க்களம் செல்லுமாறு கட்டளையிட்டு உண்மை முஸ்லிம்களை அடையாளம் காட்டியதால், தக்க காரணமின்றி யாரெல்லாம் போருக்கு வராமல் பின்தங்கினார்களோ அவர்கள் உண்மை முஸ்லிம்கள் அல்லர் என்பது வெட்ட வெளிச்சமானது. அதைத் தான் இவ்வசனம் (3:179) கூறுகிறது.

அதிக விபரத்திற்கு 104வது குறிப்பைக் காண்க.