3. மறைவானவற்றை நம்புதல்

ஐந்து புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானவை என்பதில் அடங்கும். ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி மறைவானவற்றை நம்புவது என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை நம்புவதைக் குறிக்கும்.

அல்லாஹ், வானவர்கள், சொர்க்கம், அதில் கிடைக்கும் இன்பங்கள், நரகம், அதில் அமைக்கப்பட்ட பல்வேறு தண்டனைகள், நியாயத் தீர்ப்பு நாள், அந்நாளில் ஏற்படும் அமளிகள் போன்றவற்றைக் கண்ணால் காணாமல் இருந்தும் நம்புவது தான் மறைவானவற்றை நம்புதல் எனத் திருக்குர்ஆனில் (2:3) கூறப்பட்டுள்ளது.