157. பாதுகாக்கப்பட்ட ஏடு

"பதிவுப் புத்தகம்" "பாதுகாக்கப்பட்ட ஏடு" "மறைக்கப்பட்ட ஏடு" "தெளிவான ஏடு" என்றெல்லாம் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது.

நடந்தவை, நடக்கவிருப்பவை அனைத்தையும் ஒன்று விடாமல் இறைவன் தன்னிடம் உள்ள பதிவேட்டில் பதிவு செய்திருக்கிறான். அதில் உள்ளபடியே அனைத்துக் காரியங்களும் நடக்கின்றன.

(திருக்குர்ஆன் 6:38, 6:59, 9:36, 10:61, 11:6, 13:39, 17:58, 20:52, 22:70, 33:62, 27:75, 30:56, 33:6, 34:3, 35:11, 43:4, 50:4, 56:78, 57:22, 85:22)

திருக்குர்ஆன் கூட அவனது பதிவேட்டிலிருந்து தான் எடுத்து முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. (பார்க்க: திருக்குர்ஆன் 85:21-22, 56:77-78)