73. கடனைத் தள்ளுபடி செய்தல்
ஒரு மனிதனுக்குக் கடன் கொடுத்து அந்தக் கடன் திரும்ப வரவில்லையானால் வராத கடனைத் தள்ளுபடி செய்வதை இறைவன் தர்மமாக அங்கீகரித்து அதற்கு நன்மைகளைத் தருகிறான்.
அது போல் ஸகாத் கொடுக்கக் கடமைப்பட்டவர் தமக்கு வர வேண்டிய கடன்களைத் தள்ளுபடி செய்து தன் மீது கடமையான ஸகாத் தொகையிலிருந்து அதைக் கழித்துக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து (2:280) அறிந்து கொள்ளலாம்.