இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்று இடம் பெற்றிருப்பதால் அதுவே இதற்குப் பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
93:1. முற்பகல் மீது சத்தியமாக!
93:2. ஒதுங்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக!
93:3. (முஹம்மதே!) உமது இறைவன் உம்மைக் கை விடவும் இல்லை; வெறுக்கவும் இல்லை.
93:4. இவ்வுலகை விட மறுமையே உமக்குச் சிறந்தது.
93:5. (முஹம்மதே!) உமது இறைவன் உமக்கு வழங்குவான். நீர் திருப்தியடைவீர்.
93:6. உம்மை அனாதையாகக் கண்டு அவன் அரவணைக்கவில்லையா?
93:7. உம்மை வழி அறியாதவராகக் கண்டு வழி காட்டினான்.8193:8. உம்மை வறுமையில் கண்டு தன்னிறைவு பெற்றவராக்கினான்.
93:9. எனவே அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!
93:10. யாசிப்பவரை விரட்டாதீர்!
93:11. உமது இறைவனின் அருட்கொடையை அறிவிப்பீராக!