274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்

துல்கர்கணைன் அவர்கள் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது.

துல்கர்ணைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் மேற்கு நோக்கிச் செல்ல ஆரம்பித்து விடுகிறார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.

உலகம் உருண்டையாக இருந்தால் மாத்திரமே இது சாத்தியமாகும். அப்போது தான் கிழக்கு நோக்கிப் புறப்பட்டவர் மேற்கு நோக்கி வந்து சேர முடியும்.

ஒரு வரலாற்று நிகழ்ச்சியைக் கூறும் போது கூட மிகக் கவனமாக இந்த அறிவியல் உண்மையைக் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு மற்றொரு சான்று.