இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக அல் காரிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆக்கப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
101:1. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி!
101:2. அது என்ன திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி?
101:3. திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
101:4. அந்நாளில்1 மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆவார்கள்.
101:5. மலைகள் உதிர்க்கப்பட்ட கம்பளி போல் ஆகும்.
101:6, 7. யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.26101:8, 9. யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும்.26101:10. ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்?
101:11. (அது) சுட்டெரிக்கும் நெருப்பாகும்.