243. ஓரங்களில் குறையும் பூமி

நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் விழுங்கப்பட்டு, குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பனிப் பாறைகள் உருகிக் கடலில் கலக்கின்றன. இதனால் கடலின் நீர் மட்டம் உயர்ந்து நிலப்பரப்பைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருக்கிறது.

நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலப் பரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டு பிடிப்பைக் கூறிய திருக்குர்ஆன், இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் (13:41, 21:44) தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.