5. மனித ஷைத்தான்கள்

மனிதர்கள் நல்வழி செல்லாமல் தடுக்கக் கூடிய, மனிதக் கண்களுக்குத் தென்படாத ஒரு படைப்பு ஷைத்தான்கள் எனப்படுகின்றனர். திருக்குர்ஆனில் ஷைத்தான்கள் குறித்து பல வசனங்கள் எச்சரிக்கை செய்கின்றன.

ஆயினும் சில வசனங்களில் ஷைத்தான் என்ற சொல் அதன் நேரடிப்பொருளில் பயன்படுத்தப்படாமல் கெட்ட மனிதர்களைக் குறிப்பிடு வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2:14, 2:102, 6:112 ஆகிய வசனங்கள் அது போல் பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களாகும்.