360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை 69வது குறிப்பில் காண்க!
அந்தக் காலக் கெடுவிலிலிருந்து கர்ப்பிணிப் பெண்கள் விதி விலக்குப் பெறுகிறார்கள்.
கணவன் மரணிக்கும் போது மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் கிடையாது.
கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.
இவ்வசனத்திலிலிருந்து (65:4) இந்தச் சட்டத்தை அறியலாம்.