247. இப்ராஹீம் நபி, பெற்றோருக்குப் பாவ மன்னிப்புத் தேடியது ஏன்?

இவ்வசனத்தில் (26:86) இப்ராஹீம் நபி அவர்கள் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புக் கோரியதை இறைவன் கூறுகிறான். இதை முன்மாதிரியாகக் கொண்டு இணை கற்பித்தவர்களுக்கும், இறைவனை அடியோடு நிராகரிப்பவர் களுக்கும் பாவமன்னிப்புக் கோரலாம் என்று கருதக் கூடாது.

ஏனெனில் 60:4 வசனத்தில் "இப்ராஹீம் தமது தந்தைக்காகப் பாவமன்னிப்புத் தேடிய விஷயத்தைத் தவிர மற்ற விஷயங்களில் தான் அவரிடம் முன்மாதிரி இருக்கிறது" எனக் கூறப்படுகிறது.

9:114 வசனத்தில் "தமது தந்தை இறை வனின் எதிரி என்பதை அறிவதற்கு முன்னால் அவருக்காக இப்ராஹீம் பாவமன்னிப்புத் தேடினார்; தமது தந்தை இறைவனின் எதிரி என்பது தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார்" எனக் கூறப்படுகிறது.