47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம்

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட போது "நோன்பு நோற்கச் சக்தி உடையோர் விரும்பினால் நோன்பு நோற்கலாம்; அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம்" என்ற சலுகை இருந்தது. அது தான் இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:184) கூறப்பட்டுள்ளது.

"ரமலான் மாதத்தை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும்" என்ற கட்டளை வந்த பின், "சக்தி பெற்றவர் கட்டாயம் நோன்பு நோற்க வேண்டும்" என்ற புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டம் அடுத்த வசனத்தில் (2:185) கூறப்பட்டுள்ளது. (நூல்: புகாரி 4507)

இறை வசனம் ஏன் மாற்றப்பட வேண்டும் என்பது குறித்து அறிய 30வது குறிப்பைப் பார்க்கவும்.