285. சூனியம் ஒரு தந்திரமே!
மூஸா நபி காலத்தில், அவர்கள் அற்புதம் நிகழ்த்திக் காட்டும் போது சூனியக்காரர்களும் அற்புதம் நிகழ்த்திக் காட்டினார்கள்.
அது பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது "கயிறுகளைப் பாம்புகளாக மாற்றினார்கள்" என்று கூறாமல் "அவ்வாறு தோற்றமளித்தது" என்றும் "கண்களை வயப்படுத்தினார்கள்" என்றும் கூறுகிறான். (திருக்குர்ஆன் 7:116, 20:66)
"பாம்பு போல் தோற்றமளித்தது"
"கண்களை வயப்படுத்தினார்கள்"
என்று மேற்கண்ட வசனங்களில் கூறப்பட்டதிலிருந்து, சூனியக்காரர்கள் ஏதோ தந்திரம் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.
இப்படித் தந்திரம் செய்பவர்கள் தான் சூனியக்காரர்கள் என்றும் இங்கு குறிப்பிடப்படுகிறார்கள்.
சூனியம் என்பது ஒரு தந்திரக் கலை தானே தவிர அதன் மூலம் எதார்த்தமாக எதுவும் செய்ய இயலாது என்பதற்கு இங்கே இறைவன் பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தை போதுமான சான்றாக இருக்கிறது.
(அதிக விளக்கத்திற்கு 28, 182, 357 ஆகிய குறிப்புகளைக் காண்க!)