இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே பெயராக வைக்கப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
88:1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா?
88:2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும்.
88:3. அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.
88:4. சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும்.
88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.
88:6. முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.
88:7. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.
88:8. அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.
88:9. தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும்.
88:10. உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.
88:11. அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
88:12. அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
88:13. அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன.
88:14. குவளைகள் வைக்கப்பட்டிருக்கும்.
88:15. வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன.
88:16. விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.
88:17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?39988:18. வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
88:19. மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?
88:20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
88:21. எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.8188:22. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.8188:23, 24. எனினும், புறக்கணித்து (ஏக இறைவனை) மறுப்பவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான்.2688:25. அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது.
88:26. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.