335. பூமி உருண்டையானது
"உதிக்கும் பல திசைகளுக்கும் இறைவன்" என்ற சொற்றொடர் இந்தப் பூமி உருண்டை என்பதற்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. (திருக்குர்ஆன் 37:5, 70:40, 55:17)
பூமி தட்டையாக இருந்தால் ஒரு திசையில் உதித்து மறு திசையில் மறைந்து விடும். பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.
பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாகும்.