349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்கு தண்டனை!

ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்பது மறுமையில் வழங்கப்படும் தண்டனைக்கு முன் வேறொரு தண்டனை உள்ளது என்பதை நிரூபிக்கிறது. ஏனென்றால் இவ்வசனத்தில் (40:46) யுகமுடிவு நாளில் இவர்களைக் கடும் தண்டனைக்குக் கொண்டு செல்லுங்கள் என்று கூறப்படுகிறது. யுக முடிவு நாளில் கடும் வேதனையும் அதற்கு முன் அதைவிடக் குறைந்த வேதனையும் உள்ளது என்பது கப்ரு வேதனையைத் தான் சுட்டிக்காட்டுகிறது.

இது பற்றி அதிக விபரம் அறிய 332, 166 ஆகிய குறிப்புகளைப் பார்வையிடுக!