374. துல்கர்னைன் நபியா?

இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர் இறைத் தூதரா? இறைத் தூதராக இல்லாத நல்ல மனிதரா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

யஃஜூஜ், மஃஜூஜ் எனும் கூட்டத்தினருக்கும், மக்களுக்கும் மத்தியில் தடுப்பை ஏற்படுத்திய துல்கர்னைன் அவர்கள் இத்தடுப்பு யுக முடிவு நாள் வரை நிலைத்திருக்கும் எனவும், யுக முடிவு நாள் ஏற்படும் போது தடுப்பு தூள் தூளாக்கப்பட்டு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தினர் வெளியே வருவார்கள் என்றும் கூறுகிறார்கள். இவ்வாறு இறைத் தூதரால் தான் கூற முடியும். எனவே துல்கர்னைன் இறைத் தூதர் என்று கூறும் அறிஞர்கள் இவ்வசனத்தை அதற்குச் சான்றாகக் கொள்கின்றனர்.