கருவுற்ற சினை முட்டை

மொத்த வசனங்கள் : 19

இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
96:1. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!281
96:2. அவன் மனிதனை கருவுற்ற சினை முட்டையிலிருந்து படைத்தான்.365
96:3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.
96:4. அவனே எழுது கோலால் கற்றுத் தந்தான்.
96:5. அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
96:6, 7. அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான்.26
96:8. உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.
96:9, 10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?26 & 32
96:11, 12, 13. அவர் நேர் வழியில் இருப்பதையும் அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?26
96:14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15. அவ்வாறில்லை! அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம்.
96:16. அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி.426
96:17. அவன் தனது சபையோரை அழைக்கட்டும்.
96:18. நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.
96:19. எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!396