424. மாற்றப்பட்ட விவாகரத்துச் சட்டம்

இஸ்லாத்தின் துவக்க காலத்தில் கணவன், மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து நடந்தால் விவாகரத்துக்குப் பிறகு அவர்கள் சேர்ந்து வாழக் கூடாது என்றாலும் மனைவி, கணவனின் வீட்டிலேயே இருக்க வேண்டும். கணவனும் மனைவியை வெளியேற்றக் கூடாது. மனைவி தானாகவும் வெளியேறக் கூடாது என்ற நடைமுறை இருந்தது. அது தான் இவ்வசனத்தில் (65:1) கூறப்படுகின்றது.

இதனால் இருவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இது குறித்து விரை வில் மாற்றுச் சட்டம் தரப்படும் என்றும் இந்த வசனத்தில் கூறப்படுகின்றது.

இதன் பிறகு இரண்டு தடவை விவாகரத்துச் செய்தால் மனைவியை மீட்டிக் கொள்ளலாம், மீட்டிக் கொள்ளத் தவறினால் அந்தப் பெண் மறுமணம் செய்யலாம், விவாகரத்துக்குப் பின் கணவனது வீட்டிலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை, மூன்றாவது தடவை விவாகரத்துச் செய்தால் அதன் பிறகு மீட்டிக் கொள்ள முடியாது போன்ற சட்டங்கள் அருளப்பட்டு இந்த (65:1) வசனம் மாற்றப்பட்டு விட்டது.