160. மனிதனைப் பாதுகாக்கும் வானவர்கள்
இவ்வசனத்தில் (6:61) பாதுகாவலர்கள் என்று கூறப்படுவது வானவர்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய தவணை வருவதற்கு முன் அவனைக் காப்பாற்றும் பணிக்கென வானவர்கள் உள்ளனர்.
ஒரு விபத்தில் பலரும் பலியாகும் போது சிலர் மட்டும் அதிர்ஷ்டவசமாகத் தப்பி விட்டதாகக் கூறுகின்றனர். உண்மையில் அவர்களின் நேரம் வராததால் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கும் வானவர்கள் காப்பாற்றுகின்றனர் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. அது தான் இங்கே கூறப்படுகிறது. இவ்வசனத்தை முழுமையாக வாசித்தால் மரணத்திலிருந்து காப்பாற்றுவது பற்றியே கூறப்படுவதை அறியலாம்.