இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.
32:1. அலிஃப், லாம், மீம்.232:2. (இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
32:3. "இதை இவர் இட்டுக்கட்டி விட்டார்" என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர் வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறை வனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.
32:4. வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ17 இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
32:5. வானத்திலிருந்து பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் வருடங்கள் அளவுடையது.29332:6. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
32:7. அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.36832:8. பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின் சத்திலிருந்து உருவாக்கினான்.
32:9. பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
32:10. "பூமிக்குள் மறைந்த பின் புதுப் படைப்பை நாங்கள் பெறுவோமா?" என்று அவர்கள் கேட்கின்றனர். உண்மையில் அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை488 மறுக்கின்றனர்.
32:11. "உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார்.165 பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்" என்று கூறுவீராக!
32:12. குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலை குனிந்து, "எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுவதை நீர் காண வேண்டுமே!
32:13. நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவருக்கான நேர் வழியைக் கொடுத்திருப்போம். மாறாக "அனைத்து கெட்ட மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்" என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.
32:14. "இந்த நாளின்1 சந்திப்பை நீங்கள் மறந்ததால் அனுபவியுங்கள்! நாமும் உங்களை மறந்து விட்டோம்.6 எனவே நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்!" (என்று கூறப்படும்.)
32:15. நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும் போது ஸஜ்தாவில் விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்.39632:16. அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள்படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள்.
32:17. அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண்குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
32:18. நம்பிக்கை கொண்டவர் குற்றம் செய்தவரைப் போல் ஆவாரா? அவர்கள் சமமாக மாட்டார்கள்.
32:19. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (நன்மை) செய்து கொண்டிருந்ததால் தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன.
32:20. குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!" என்று அவர்களுக்குக் கூறப்படும்.
32:21. அவர்கள் திருந்துவதற்காக இப்பெரிய வேதனைக்கு முன்னர் (இவ்வுலகில்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்.
32:22. தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம்.
32:23. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்.315 அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம்.
32:24. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து நமது வசனங்களை உறுதியாக நம்பிய போது நமது கட்டளைப்படி வழி காட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து ஏற்படுத்தினோம்.
32:25. அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் கியாமத் நாளில்1 உமது இறைவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.
32:26. இவர்களுக்கு முன் பல தலைமுறையினரை நாம் அழித்திருப்பது இவர்களுக்கு நேர் வழி காட்டவில்லையா? அவர்களின் குடியிருப்புக்களில் இவர்கள் நடந்து செல்கின்றனர். இதில் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் செவியுற மாட்டார்களா?
32:27. "வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்" என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர் களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
32:28. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்தத் தீர்ப்பு எப்போது?" என்று அவர்கள் கேட்கின்றனர்.
32:29. "தீர்ப்பு நாளில்1 (ஏக இறைவனை) மறுத்தோருக்கு அவர்களது நம்பிக்கை பயன் தராது. அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறுவீராக!
32:30. அவர்களைப் புறக்கணிப்பீராக! எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.